செயற்குழுவில் உருக்கமாக பேசியது என்ன? - மனம்திறந்த ஓ.பன்னீர்செல்வம்

செயற்குழுவில் உருக்கமாக பேசியது என்ன? - மனம்திறந்த ஓ.பன்னீர்செல்வம்
செயற்குழுவில் உருக்கமாக பேசியது என்ன? - மனம்திறந்த ஓ.பன்னீர்செல்வம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுகவின் செயற்குழுக்கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தேர்தல் வந்தால் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட, ஜெயலலிதாவால் வளர்க்கட்ட அதிமுகவின் வெற்றி நாம் எப்படி கட்டிக்காக்க வேண்டும் என்றே நான் உருக்கமாக பேசியதின் சுருக்கம். கூட்டணி என்பது நேரம் வரும் போது அமைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெரும் சூழல் உருவாகியுள்ளது. எங்களோடு இணைந்து வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். அது மாநில கட்சியாக இருந்தாலும் சரி, தேசிய கட்சியாக இருந்தாலும் சரி. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com