"அரசு எடுக்கும் முயற்சிக்கு அனைவர் ஒத்துழைப்பும் தேவை" - ஓபிஎஸ்சுக்கு ஸ்டாலின் நன்றி

"அரசு எடுக்கும் முயற்சிக்கு அனைவர் ஒத்துழைப்பும் தேவை" - ஓபிஎஸ்சுக்கு ஸ்டாலின் நன்றி
"அரசு எடுக்கும் முயற்சிக்கு அனைவர் ஒத்துழைப்பும் தேவை" - ஓபிஎஸ்சுக்கு ஸ்டாலின் நன்றி

தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக. தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 74 இடங்களில் மட்டும் வென்று தோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து புதிய முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com