பச்சிளம் குழந்தை கைவிரலை வெட்டிய செவிலியர்
பச்சிளம் குழந்தை கைவிரலை வெட்டிய செவிலியர்web

வேலூர் அரசு மருத்துவமனை| பிறந்து 6 நாட்களான பச்சிளம் குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர்!

வேலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில், செவிலியர் மீது காவல் துறை வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
Published on

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஆறு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கைவிரலை பணியிலிருந்த அருணாதேவி என்ற செவிலியர் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவின் விரலை துண்டித்த செவிலியர்..

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று, பிறந்து ஆறு நாட்களே ஆன வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த விமல்ராஜ் - நிவேதா தம்பதியினரின் பச்சிளம் ஆண் குழந்தையின் வலது கையில் ஒட்டப்பட்டிருந்த டேப்ஐ செவிலியர் அருணாதேவி என்பவர் கத்தரிக்கோலால் கட்பண்ணும் போது கை கட்டை விரலை தவறுதலாக துண்டாக்கியுள்ளார்.

இவ்விவகாரத்தில் குழந்தையின் உறவினர்கள் அளித்த புகாரியின் அடிப்படையில், செவிலியர் அருணா தேவி மீது வேலூர் தாலுகா காவல்துறையினர் அஜாக்கிரதையாக செயல்பட்டது என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com