டாஸ்மாக் நேரத்தில் மாற்றமா? .. தாறுமாறாக எழுந்த எதிர்ப்பு.. அமைச்சர் கொடுத்த அதிரடி விளக்கம்

”டாஸ்மாக்கின் நேரத்தை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை” என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக் மதுபானக் கடை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, ”டாஸ்மாக்கின் நேரத்தை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை. தற்போதைய நேரமே தொடரும். டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் என்னென்ன சிக்கல்கள் உள்ளது? அந்தச் சிக்கல்களைச் சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போகமுடியவில்லை.

அரசு ஏதோ 24 மணி நேரமும் மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிடும் என்பதுபோல் பேசினால் நாங்கள் என்ன செய்வது? எனவே, திட்டவட்டமாக கூறுகிறேன், டாஸ்மாக்கைப் பொறுத்தவரை, பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com