திருட முயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை

திருட முயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை
திருட முயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடை மற்றும் வீடுகளில் திருட முயன்ற வட மாநில இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள காசுக் கடைத்தெருவில் வட இந்திய வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மயங்கிக் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வடமாநிலத்தை சேர்ந்த அந்த வாலிபர் யார் என்ற விவரம் எதுவும் இதுவரை தெரியவில்லை. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சுமார் 10 பேரை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வட இந்திய வாலிபர் அந்தப் பகுதியில் உள்ள வீடு மற்றும் கடைகளில் திருட முயன்ற தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இதில் அவர் மயங்கி கீழே விழுந்ததால் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com