‘அதிமுகவில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை’ - பொதுக்குழுவில் ஓபிஎஸ் அதிரடி பேச்சு

‘அதிமுகவில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை’ - பொதுக்குழுவில் ஓபிஎஸ் அதிரடி பேச்சு
‘அதிமுகவில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை’ - பொதுக்குழுவில் ஓபிஎஸ் அதிரடி பேச்சு

இன்று சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் யார் யாரையும் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறினார். 

பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது, “தமிழகத்தில் இந்தாண்டு புதிய புரட்சி ஏற்படும். கொரோனாவை விட கொடிய வைரஸ் திமுக. அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. ஆனால் கோஷ்டி சேர்க்கும் ஆட்களே இல்லை.

இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் எந்த இயக்கமும் அடையாத வெற்றியை அதிமுக பெற வேண்டும். மனமாச்சரியங்களை களைந்து, வேறுபாடுகளை மறந்து கட்சியின் வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

கட்சிக்கு விசுவாசமாக இருங்கள். ஒற்றுமையுடன் செயல்படுங்கள். இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை. யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com