தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என மாநில மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழ்நாட்டில் இனி மின் தடை இருக்காது. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு என்று பொத்தாம் பொதுவாக புகார் கூறக்கூடாது. கடந்த 19ஆம் தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு அணில்கள் சேதம் செய்வதால் சில இடங்களில் மின் தடை ஏற்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com