நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால் இங்கே மின் உற்பத்தி வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனிடையே மத்திய அரசு பொது முடக்கத்திற்கான விதிமுறைகளைத் தளர்த்தியதால் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.