நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும்: வானிலை மையம்

நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும்: வானிலை மையம்
நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும்: வானிலை மையம்

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் நாளை காலை வரை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இப்போது நிவர் புயல் கடலூரில் இருந்து 290 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு நகர்ந்து வருகிறது. புதுச்சேரிக்கு 300 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து 350 கி.மீ., தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு முதல் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com