தமிழ்நாடு என்றாலே பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் உண்டு -நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு என்றாலே பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் உண்டு -நிர்மலா சீதாராமன்
தமிழ்நாடு என்றாலே பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் உண்டு -நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு என்றாலே பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் இருக்கிறது; மனிதாபிமானம் மிக்க பிரதமர் நரேந்திர மோடி ஒக்கி புயலின் போது கடைசி மீனவர் உயிருடன் கரை திரும்பும் வரை மீட்பு பணி நடைபெற வேண்டுமென தெரிவித்ததாக டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி.


பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் நாடு முழுவதும் பிரதமருடைய பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய நிதியமைச்சர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த நன்னாளில் நான் இறைவனிடம் வேண்டிக்கொள்வது பிரதமருக்கு நல்ல ஆயுளை வழங்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பிரதமருடன் எனக்கு இரண்டு முக்கிய அனுபவம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மனிதாபிமானம் மிக்கவர். ஒக்கிப்புயலின் பொழுது பிரதமர் நரேந்திர மோடி என்னை தமிழகத்தின் கடைக்கோடி மற்றும் கேரள எல்லைக்கு அனுப்பியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை பிரதமர் எனக்கு அறிவுறுத்தினார். ஒக்கி புயலின் பொழுது பிரதமர் நரேந்திர மோடி என்னை கன்னியாகுமரி, நாகர்கோவிலுக்கும் அதனுடைய எல்லையில் இருக்கக்கூடிய கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கும் அனுப்பினார். அப்போது கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாமல் இருந்தது தொடர்பாக அரசு கவனமாக நடவடிக்கை எடுத்தது.

காணாமல் போன மீனவர்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதற்காக கடற்படை விமானப்படை அனைத்து படகுகளையும் பயன்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டோம். கடைசி மீனவர் உயிரோடு மீட்கும் வரை உங்களுடைய முயற்சியை கைவிடக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்டோ என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கடற்படை இனனால் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானது அப்போதும் பிரதமர் நரேந்திர மோடி நீங்கள் நேரடியாக சென்று இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டும் என எண்ணை அனுப்பினார் அந்த மீனவரின் உடலை பெற்றோர்கள் வாங்காமல் எங்களுக்கு நீதி வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் சென்று அந்த பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அறிவித்த பிறகு அந்த இறந்து போன மீனவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடு என்றாலே பிரதமருக்கு தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. தமிழகத்தின் இலக்கியங்கள் உள்ளிட்டவர்கள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பலமுறை பேசியிருக்கிறார். பிரதமர் ஒரு மனிதாபிமானம் மிக்கவர் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com