எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
Published on

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறன. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் தற்போது கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்ட இலங்கை கடற்படையினர், பின்னர் அவர்களை சிறையில் அடைந்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com