மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட லாரி

மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட லாரி
மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட லாரி

குன்னூர் அருகே மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரி 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த அம்பிகாபுரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக் அப் லாரி ஒன்று ‌மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு 50 அடி ஆழத்தில் இருந்த கோவிலின் மீது விழுந்தது. இதில் ‌அதிர்ஷடவசமாக பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே போல், மழை காரணமாக கோத்தகிரி பேருந்து நிலையத்தில் ‌பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ‌இந்த விபத்தினால் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. 

கன்னியாகுமரி அருகே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் தென்தமிழகம் உள்பட பல இடங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூரில் பெய்த மழையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com