\
நீலகிரி: மழை குறைந்ததால் முதுமலையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி: மழை குறைந்ததால் முதுமலையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி: மழை குறைந்ததால் முதுமலையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
Published on

மழை குறைந்ததால் நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்தது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இம்மாவட்டத்திற்கு செல்ல வேண்டாம் என அரசு தரப்பிலிருந்து அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் மழை குறைந்ததாலும் வார விடுமுறை என்பதாலும் முதுமலையில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. வனப்பகுதிக்குள் வாகன சவாரி செல்லவும், யானைகள் முகாமை பார்வையிடவும் சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com