நீலகிரி: காட்டு யானை தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

நீலகிரி: காட்டு யானை தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

நீலகிரி: காட்டு யானை தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

மசினடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்னை காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி கிராமம், முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், மசனக்குடி பகுதியை சேர்ந்த சிவநஞ்சம்மாள் (65) என்பவர் அங்குள்ள ஏரி பகுதியை ஒட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஏரி பகுதிக்கு வந்த காட்டு யானை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்றை தாக்கியிருக்கிறது. இதனைக் கண்ட ஊர்மக்கள் சத்தம்போட்டு யானையை விரட்டியுள்ளனர். கோபத்தில் அங்கிருந்து ஓடிய காட்டு யானை ஆடு மேய்த்து கொண்டிருந்த சிவநஞ்சம்மாளை தாக்கி இருக்கிறது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com