நீலகிரி: ஊருக்குள் புகுந்த காட்டெருமைகள் - அச்சத்தில் மக்கள்

நீலகிரி: ஊருக்குள் புகுந்த காட்டெருமைகள் - அச்சத்தில் மக்கள்
நீலகிரி: ஊருக்குள் புகுந்த காட்டெருமைகள் - அச்சத்தில் மக்கள்

கூடலூர் அருகே முதல் முறையாக காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள உப்பட்டி, சேலக்குன்னா பகுதிக்குள் வழிதவறிய 2 காட்டெருமைகள் புகுந்தன. இந்த பகுதிக்குள் காட்டெருமைகள் வருவது இதுவே முதல்முறை என்பதால் காட்டெருமைகளை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு காட்டு எருமைகளும் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் இருந்தன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் 2 காட்டெருமைகளையும் அப்பகுதியில் இருந்து விரட்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து காட்டெருமைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com