தமிழ்நாடு
”நாங்க கும்பலா குடும்பத்துடன் சுத்துவோம்” பயணிகளுக்கு ஷாக் கொடுத்து பரவசப்படுத்திய யானைகள் கூட்டம்!
விலங்குகளை நாம் சீண்டாத வரையில் அது நம்மை சீண்டாது யானைகள் அதற்கு உதாரணம். இங்கு ஒரு யானைக்குடும்பம் பயணிகளை எச்சரித்ததுடன், அவர்களை கடந்து சென்றதும் தங்களது நன்றியை தெரிவித்துச் சென்றது வியக்கவைக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் பகுதியில் சுதந்திரமாக குடும்பத்துடன் உலா வந்த யானைக் கூட்டம்.
சுற்றுலா செல்லும் பயணிகளின் பேருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் செல்லும் பொழுது, கூட்டமாக வந்த யானைக்கூட்டம் வாகனத்திற்கு அருகில் வரும்பொழுது பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. பிறகு வாகனத்தை கடந்து சென்றதும் நன்றி தெரிவித்து சென்றது.