நீலகிரி: ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய கேரள இளைஞர் சடலமாக மீட்பு

நீலகிரி: ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய கேரள இளைஞர் சடலமாக மீட்பு
நீலகிரி: ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய கேரள இளைஞர் சடலமாக மீட்பு

கூடலூர் அருகே ஆற்றில் குளித்த கேரள சுற்றுலா பயணி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் தங்கும் விடுதிக்கு 9 பேர் சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் நேற்று மதியம் மாயாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது வினோத் (45) என்பவர் ஆற்றைக் கடக்க முயற்சித்துள்ளார்.

இதையடுத்து ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர், சூழலில் சிக்கி தண்ணீருக்குள் மாயமானார். இந்நிலையில், தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தண்ணீரில் மாயமான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com