தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் NIA அதிகாரிகள் சோதனை... என்ன காரணம்?

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
NIA அதிகாரிகள் சோதனை
NIA அதிகாரிகள் சோதனைபுதிய தலைமுறை

தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளோடு தமிழகத்திலிருந்து தொடர்பில் இருப்போர் என்ற சந்தேகத்தின் பேரில், தமிழ்நாட்டில் சிலரின் வீடுகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, நெல்லை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

NIA அதிகாரிகள் சோதனை
தமிழ்நாடு முழுவதும் தொடரும் என்.ஐ.ஏ சோதனை - நீதிமன்றத்தை நாடியது நா.த.க.!

இந்த சோதனையில் ஈடுபட்டுள்ள 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆவணங்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் இரு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஆர்.ஜி நகரில் உள்ள ரஞ்சித் என்பவரது வீட்டிலும், காளப்பட்டியில் முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தடைசெய்யப்பட்ட நபர்கள் தமிழகத்திற்கு வந்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் அதற்கு காரணமான நபர்களின் மீதுதான் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com