செய்தி எதிரொலி: மாவுக்கட்டு போட லஞ்சம் வாங்கிய மருத்துவ ஊழியர் பணியிடை நீக்கம்

செய்தி எதிரொலி: மாவுக்கட்டு போட லஞ்சம் வாங்கிய மருத்துவ ஊழியர் பணியிடை நீக்கம்
செய்தி எதிரொலி: மாவுக்கட்டு போட லஞ்சம் வாங்கிய மருத்துவ ஊழியர் பணியிடை நீக்கம்

புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மதுரை அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடுவதற்கு லஞ்சம் பெற்ற மருத்துவ ஊழியர் பணியிடை நீக்கம் செய்யபட்டார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது. இந்நிலையில் இது குறித்து நேற்று முன்தினம் புதிய தலைமுறை மேற்கொண்ட கள ஆய்வில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் மாவுக்கட்டு போடும் பணியில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர் கணேசன் என்பவர் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

இது குறித்த வீடியோ ஆதாரத்துடன் புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பான நிலையில், எலும்பு முறிவு பிரிவு தலைமை மருத்துவர் தலைமையிலான விசாரணை குழு அமைத்து, விசாரணை நடத்தபட்ட நிலையில், லஞ்சம் பெற்ற ஊழியர் கணேசனை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை முதல்வர் ரத்தனவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com