புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் என்னென்ன தாலுகாக்கள்?

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் என்னென்ன தாலுகாக்கள்?
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் என்னென்ன தாலுகாக்கள்?

தமிழகத்தில் புதிய மாவட்டங்களுக்கான வருவாய் நிர்வாக எல்லை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்படும் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. நெல்லை மாவட்டத்தில் மானூர், பாளையங்கோட்டை, நெல்லை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி மற்றும் திசையன்விளை என 8 தாலுகாக்கள் உள்ளன. 

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய 4 தாலுகாக்கள் இடம்பெறுகின்றன. புதிதாக அமையும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட், வேலூர், கே.வி.குப்பம் ஆகிய 6 தாலுகாக்கள் உள்ளன. 

காஞ்சிபுரத்தை பிரித்து உருவாக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. 

புதிதாக உருவாகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய தாலுகாக்கள் இடம்பெறுகின்றன. பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம், வானூர், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுகாக்கள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com