இரவோடு இரவாக விழுந்த நீர் இடி? - பச்சைமலையில் உருவான புதிய அருவி

இரவோடு இரவாக விழுந்த நீர் இடி? - பச்சைமலையில் உருவான புதிய அருவி

இரவோடு இரவாக விழுந்த நீர் இடி? - பச்சைமலையில் உருவான புதிய அருவி
Published on

பெரம்பலூர் மாவட்டம் அய்யர்பாளையம் அருகே நீர் இடி விழுந்ததால் அங்கு புதிய அருவி உருவாகியுள்ள அதிசயத்தை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் அய்யர்பாளையம் கிராமத்தையொட்டி பச்சைமலை பகுதி உள்ளது. நேற்றுவரை மரம் செடி கொடிகளாக இருந்த மலைப்பகுதி தற்போது முற்றிலும் உருமாறி புதிய அருவியுடன் காணப்படுகிறது. நள்ளிரவு பெரும் சப்தத்துடன் விழுந்த நீர் இடி நினைத்து பார்க்க முடியாத அளவில் மலையை பிளந்து பெரும் பாறைகளை புரட்டி போட்டு அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீர் இடி விழுந்த இடத்திலிருந்து நீர் ஊற்று உருவாகி புதிய அருவியை உருவாக்கி சென்றுள்ளது இயற்கை. இதைக் கேள்விபட்டு நேரில் வந்து பார்த்து வியப்பில் ஆழ்ந்துள்ள பொதுமக்கள் தங்களால் நினைத்து பார்க்கமுடியாத ஒன்று என அதிசயத்து சொல்கின்றர். நீர் இடி விழுந்த நேரத்தில் பூகம்பம் போல் நில அதிர்வை உணர்ந்ததாக கூறும் அய்யர்பாளையம் கிராமபொதுமக்கள் மலைப்பகுதி பிளந்து அருவி உருவானது இது இயற்கையின் அற்புதம் என்றே கூறுகின்றனர்.

இதனைக் கேள்வி பட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் நீர் இடி விழுந்த இடத்தை பார்வையிட்டு புதிய அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com