New facility at the SIPCOT by ADATA
M K Stalinx page

SIPCOT தொழிற்பேட்டையில் புதிய உற்பத்தி நிலையம்! | ADATA | M K Stalin

இந்தத் தொழிற்சாலை 823 உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என சொல்லப்படுகிறது.
Published on

தைவான் நாட்டைச் சேர்ந்த நினைவக மற்றும் சேமிப்பு தீர்வு நிறுவனமான ADATA Technology, தமிழ்நாட்டில் தனது முக்கிய அரைக்கட்டமைப்பு (Semiconductor) உற்பத்தித் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. 26 பிப்ரவரி 2026 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள SIPCOT தொழிற்பேட்டை வளாகத்தில் புதிய உற்பத்தி நிலையத்திற்கு கணினி வாயிலாக அடிக்கல்லை நாட்டினார். ADATA Semiconductor Private Limited நிறுவனம் மேற்கொள்ளும் இந்தத் திட்டம் ரூ. 931 கோடி முதலீட்டில் உருவாகிறது.

இந்தத் தொழிற்சாலை 823 உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனச் சொல்லப்படுகிறது. இங்கு டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் சர்வர்கள் பயன்பாட்டிற்கான DRAM நினைவக மாட்யூல்கள் மற்றும் Flash Drive போன்ற உயர்தர சேமிப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

New facility at the SIPCOT by ADATA
”அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை” - திமுகவில் இணைந்த பிறகு ஓ.பி.எஸ் கொடுத்த பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com