தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை: திட்ட அதிகாரி திட்டவட்டம்

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை: திட்ட அதிகாரி திட்டவட்டம்

தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை: திட்ட அதிகாரி திட்டவட்டம்
Published on

நியூட்ரினோ ஆய்வு மையத்தை தமிழகத்தில் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடவில்லை என்று அத்திட்டத்தின் அதிகாரி விவேக் தாடர் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவையடுத்து, சுற்றுச்சூழல் அனுமதிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாகவும், சுற்றுச்சூழல் அனுமதி குறித்து தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் திட்ட அதிகாரி விவேக் தாடர் கூறியுள்ளார்.

முன்னதாக, தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதற்கான பணிகளையும் அரசு தொடங்கியது. ஆனால் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியை சுற்றி பல முக்கிய நீராதாரங்கள் இருப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய சுற்றுச்சூல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை தமிழகத்தில் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடவில்லை என்று அத்திட்டத்தின் அதிகாரி விவேக் தாடர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com