சிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக தயாரா? - நீதிமன்றம் கேள்வி

சிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக தயாரா? - நீதிமன்றம் கேள்வி
சிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக தயாரா? - நீதிமன்றம் கேள்வி
Published on

நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகாரில், சிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தயாரா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுமீதான விசாரணையில், சிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தயாரா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் உதித் சூர்யா ஒருநாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க முடியுமா..? என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேட்டுள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு ஏற்கெனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com