மாணவி உயிரிழப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கோவை நரசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவ-மாணவிகள் பேரிடர் காலங்களில் எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என நடத்தப்பட்ட பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல், மாணவி லோகேஸ்வரியை பயிற்சியாளர் தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயிற்சியாளரின் அலட்சியமே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. இதனிடையே உயிரிழந்த மாணவியின் தந்தை நல்லா கவுண்டர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சென்னையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், "பயிற்சியின்போது மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என்றும், ஒரு இளைஞரை நாம் இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இது எதிர்பாராத ஒன்று என்றும் பேரிடர் பயிற்சியில் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. பயிற்சி அளித்தவர் என்டிஎம்டிவை சேர்ந்தவர் இல்லை என்றும், இந்த சம்பவத்திற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் தொடர்பில்லை என விளக்கம் அளித்துள்ளது.