தேசிய அளவிலான கராத்தே போட்டி: 14 பதக்கங்களை வென்று அசத்திய சாத்தூர் மாணவர்கள்

தேசிய அளவிலான கராத்தே போட்டி: 14 பதக்கங்களை வென்று அசத்திய சாத்தூர் மாணவர்கள்
தேசிய அளவிலான கராத்தே போட்டி: 14 பதக்கங்களை வென்று அசத்திய சாத்தூர் மாணவர்கள்

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு 6 தங்கம் 6 வெள்ளி உட்பட 14 பதக்கங்களை வென்று படந்தால் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமத்தில் சக்கர வியூகம் கராத்தே மற்றும் சிலம்பம் விளையாட்டு கலைக்கூடம் சார்பில் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு கராத்தே மற்றும் சிலம்பப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியின் மாஸ்டர் ஹரிஹர செல்வம் தலைமையில் 14 பேர் கொண்ட குழு, தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 11, 12, 13 ஆகிய தேதிகளில் இமாச்சல் பிரதேசம் மணாலியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களைச் சேர்ந்த குழுவினர் பங்குபெற்றனர். இதில் தமிழகம் சார்பாக சாத்தூரில் உள்ள சக்கரவியூகம் கராத்தே மற்றும் சிலம்பம் குழுவினர் பங்குபெற்று வெற்றி பதக்கங்களை பெற்றனர்.

இதில், 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களை பெற்று சிறந்த குழுவிற்கான சிறப்பு பரிசையும் வென்று வந்த இவர்கள் சாத்தூர் ரயில் நிலையம் வந்தபோது அவர்களது பெற்றோர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com