கோவை கார் வெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் 40 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை கார் வெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் 40 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
கோவை கார் வெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் 40 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை
தமிழகத்தில் மட்டும் 40 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி உட்பட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் விபத்து தொடர்பாக ஏற்கனவே 43 இடங்களில் தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேகரித்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் தற்போது தமிழகத்தில் மட்டும் 40 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை பொறுத்தவரையில் மண்ணடி மற்றும் கொடுங்கையூர் தென்றல் நகர் பகுதிகளில் காலை 6 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com