முதுமலை: வளர்ப்பு யானைகள் முகாமில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி – மரியாதை செலுத்திய யானைகள்

முதுமலை: வளர்ப்பு யானைகள் முகாமில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி – மரியாதை செலுத்திய யானைகள்
முதுமலை: வளர்ப்பு யானைகள் முகாமில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி – மரியாதை செலுத்திய யானைகள்

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின.

நீலகிரி மாவட்டம் முதுமலை காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நாட்டின் 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் தேசியக் கொடிகளுடன் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது அணிவகுத்து நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி பிளிறி சத்தம் எழுப்பி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்த நிகழ்வை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலை வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து தேசியக் கொடிகளுடன் அணிவகுத்து நின்ற யானைகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com