நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி மறைவையொட்டி அத்தொகுதி காலியாக உள்ளது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அந்த தொகுதியும் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளிலும் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

அதிமுக கூட்டணியில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வனும், நாங்குநேரியில், ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

திமுக கூட்டணியில், விக்கிரவாண்டியில் புகழேந்தி போட்டியிடுகிறார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களும் நேற்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடந்து வருகிறது. இதில் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணன் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை திரும்பப்பெற 3-ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com