அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - நமது எம்.ஜி.ஆர்

அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - நமது எம்.ஜி.ஆர்
அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - நமது எம்.ஜி.ஆர்

சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது என நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் வெளியிட்டப்பட்டுள்ள கட்டுரையில், “எத்தனை தீய சக்திகளோடு சேர்ந்து துரோக கூட்டங்கள் நடத்தினாலும் அவை புஸ்வானம் ஆகிவிடும். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்று விட்டு கூறுவதா? பதவி கிடைத்துவிட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும். சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமரவைத்தவருக்கு காட்டும் விஸ்வாசம் இதுதானா? சசிகலா தலைமையில் அதிமுகவை மீட்டெடுக்கப்போவதை யாராலும் தடுக்க முடியாது.உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்பவர்கள் வரலாற்றில் நம்பிக்கை துரோகிகள் என்றே அழைக்கப்படுவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக - அமமுக இணைப்போ, சசிகலாவை சேர்க்கவோ வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக எஃகு கோட்டை என்பதால் யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டார். நமது எம்.ஜி.ஆரில் வெளியான கட்டுரை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com