நாமக்கல்: பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு

நாமக்கல்லில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் 3 நாட்களாக சடலமாக கிடந்த பரிதாபம். இளைஞர் மரணம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
death
deathpt desk

நாமக்கல் நகராட்சி துறையூர் சாலை பட்டறைமேடு பகுதியில் தனது தாயாருடன் வசித்து வந்தவர் சல்மான் (27). சல்மானின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயமுத்தூரில் உள்ள தன்னுடைய மற்றொரு மகன் வீட்டிற்கு சென்றதை அடுத்து சல்மான் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நாமக்கல் காவல்துறை
நாமக்கல் காவல்துறைpt desk

இந்நிலையில் இன்று சல்மானின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் அப்போது, சல்மான் தற்கொலை செய்தது தெரிய வந்தது. அழுகிய நிலையில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து சடலத்தை மீட்ட நாமக்கல் போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

death
உத்தரப்பிரதேசம் | மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் விபரீத முடிவெடுத்த மருத்துவர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com