நாமக்கல்: இடி தாக்கியதால் திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரம்!

நாமக்கல்: இடி தாக்கியதால் திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரம்!
நாமக்கல்: இடி தாக்கியதால் திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரம்!

நாமக்கல் அருகே இடிவிழுந்து தீப்பற்றி எரிந்த தென்னை மரம், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை சூறாவளி காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், சேந்தமங்கலம் அடுத்த மலைவேப்பங்குட்டை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் குமரேசன் என்பவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் இடி விழுந்ததில் ஓலைகள் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது.

இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com