வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்கள் கைது 

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்கள் கைது 
வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்கள் கைது 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 

கடந்த ஜூன் மாதம் ராசிபுரம் கோனேரிபட்டியை சேர்ந்த ராதா என்பவர் டூவிலரில் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக அணைப்பாளையம் பைபாஸ் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே டூவிலரில் வந்த திருச்சியை சேர்ந்த நவீன் குமரவேல், கரூர் மாவட்டம் வெங்கமேட்டை சேர்ந்த எலி ஜோஹிந்தர் ஆகிய இருவர் ராதாவின் கழுத்திலிருந்த ஆறே கால் பவுன் மதிப்பு தாலிக்கொடியை பறித்துச் சென்றனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த ராசிபுரம் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து தலைமையிலான தனிப்படை குழுவினர், இருவரையும் கைது செய்தனர்.

மேலும் நாமக்கல் எஸ்.பி.அருளரசு பரிந்துரையின் பெயரில் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் இரண்டு பேர் மீதும் திண்டுக்கல் ,திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட வழிப்பறிக் கொள்ளை வழக்குகள் உள்ளன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com