ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்ததால் பொறியியல் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு

நாமக்கலில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்ததால் பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
vigneshwaran
vigneshwaranpt desk

நாமக்கல்லை அடுத்த செல்லப்பா காலனியில் உள்ள கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன் (22). இவர், கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பை முடித்து விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதில் 5 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி செலுத்திய நிலையில் மீதி செலுத்துவதற்கான தவணை தேதி சமீபத்தில் முடிந்துள்ளது. தவணை முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்பதற்காக கடன் கொடுத்தவர்கள் லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளனர்.

police station
police stationpt desk

ஆனால், அவர் முறையாக பதில் அளிக்காததால், லோகேஷ்வரனின் பெற்றோரை கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதன் பின் தான் ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் மனமுடைந்த லோகேஷ்வரன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்துள்ளனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

தகவல் அறிந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற நாமக்கல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப் பதிவு செய்து அவரது செல்போனை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்ததால் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com