ஒரு மாதம் பரோல் - சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி

ஒரு மாதம் பரோல் - சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி
ஒரு மாதம் பரோல் -  சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்த நளினி, ஒரு மாத சிறை விடுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தாய் பத்மாவின் உடல்நிலையை கவனிப்பதற்காக நளினிக்கு 30நாட்கள் சிறை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள தாய் பத்மாவின் வீட்டில் நளினி தங்க உள்ளார். அங்கு சுழற்சி முறையில் 50காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தொலைக்காட்சிகள், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, அரசியல் பிரமுகர்களை சந்திக்கக் கூடாது என நளினிக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியாட்களை சந்திக்கவும் நளினிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் நளினி கையெழுத்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்தாவது முறையாக, சிறை விடுப்பில் நளினி வெளியே வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com