31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை - வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார் நளினி

31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை - வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார் நளினி
31 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை - வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார் நளினி

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து நளினி விடுதலையானார். 31 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்தார் நளினி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் இருந்தனர். இதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவில், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்

இந்த வழக்கில் தமிழக தரப்பு வாதத்தை பொறுத்தவரை, குற்றவாளிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதை கருத்தில்கொண்டு ஏற்கெனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நளினி உள்ளிட்ட ஆறு பேர் தாக்கல்செய்த மனுக்களை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் தமிழக சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, பின்பு , தீர்ப்பின் நகலை சரி பார்த்தபின், உடனடியாகவோ அல்லது இன்றோ 6 பேரும் விடுதலை செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். நளினியின் கணவர் முருகன் உட்பட பிறரும் சற்றுநேரத்தில் விடுதலையாகவுள்ள நிலையில், கணவரைக்காண ஆண்கள் சிறைக்கு நளினி சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com