பரோலில் வந்துள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனுடன் சந்திப்பு

பரோலில் வந்துள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனுடன் சந்திப்பு
பரோலில் வந்துள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனுடன் சந்திப்பு

சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ள நளினி, வேலூர் மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனை சந்தித்தார்.

முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினி ஒருமாத காலம் பரோல் விடுப்பில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி வெளியில் வந்தார். வெளியில் வந்தவர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் தனது தாயாருடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில் இதே வழக்கில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனை சிறைக்கு சென்று சந்திக்க ஒருவார காலமாக அனுமதி கேட்டுவந்த நிலையில். இன்று அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து நளினி தங்கியுள்ள பிரம்மபுரம் பகுதியில் இருந்து பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சுமார் ஒருமணி நேரம் முருகன் - நளினி சந்திப்பு நடந்தது. பின்னர் காவல் துறையினர் பாதுகாப்புடன் மீண்டும் நளினி. பிரம்புரம் அழைத்து செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com