தங்க மீன், வெள்ளி மீன் சீர்வரிசையை கடலில் வீசி சிவனுக்கு அர்ப்பணம்.. நாகையில் விநோத திருவிழா!

நடுக்கடலில் அதிபத்த நாயனார் சிவனுக்கு தங்க மீன், வெள்ளி மீன் அர்பணிக்கும் விநோத திருவிழா நாகையில் நடைபெற்றது.

நடுக்கடலில் அதிபத்த நாயனார் சிவனுக்கு தங்க மீன், வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் விநோத திருவிழா நாகையில் நடைபெற்றது. அதிபத்த நாயனார் என்ற பக்தருக்கு சிவன் முக்திபேறு அளித்ததாக நம்பப்படும் நிகழ்வைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீன் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி படகில் தங்க மீன், வெள்ளி மீன் சீர்வரிசையுடன் சென்ற மீனவர்கள் தங்க மீன், வெள்ளி மீன்களை நடுக்கடலில் வீசினர். அதனை இளைஞர்கள் திரும்ப எடுத்து சிவனுக்கு அர்ப்பணம் செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com