'மகளுக்கு கொடுமை நடக்கிறது காப்பாற்றுங்கள்'! நடுரோட்டில் தனியாக தர்ணா இருந்த தாய்!

'மகளுக்கு கொடுமை நடக்கிறது காப்பாற்றுங்கள்'! நடுரோட்டில் தனியாக தர்ணா இருந்த தாய்!
'மகளுக்கு கொடுமை நடக்கிறது காப்பாற்றுங்கள்'! நடுரோட்டில் தனியாக தர்ணா இருந்த தாய்!

தன்னுடைய மகளிற்கு தன் குடும்பத்தார் கொடுமை இழைக்க முயற்சிப்பதாகவும், இதனால் சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்க வலியுறுத்தி மதுரையில் சுமார் ஒரு மணி நேரம் தனியாக சாலையில் அமர்ந்து அச்சிறுமியின் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த பெண்ணொருவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே தான் வசிக்கும் பகுதியைச் சார்ந்த மற்றொரு நபரை அப்பெண் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இவருடைய மகள்களை அப்பெண்ணின் தாயார் குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அழைத்துச் செல்லப்பட்ட மூத்த மகளுக்கு 18 வயது கூட ஆகாத நிலையில் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க இவரது பெற்றோர் முயற்சி செய்வதாக கூறி காவல் நிலையத்தில் அச்சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார. அவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்காததாலும், தன் பெற்றோர் வசம் இருக்கும் தன் மகளை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்க வலியுறுத்தியும், சிறுமியின் தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை சாலையில் தனியாக அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் சமாதானம் செய்து சிறுமியை உடனே மீட்டு அரசு காப்பதில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com