ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தி சேலத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் சேலத்தில் போராட்டம் நடத்தினர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார், பாரம்பரியமாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஜல்லிக்கட்டுக்குக்காக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.