ஜீயருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்

ஜீயருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்
ஜீயருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்

சடகோப ராமானுஜ ஜீயருக்கு பல்வேறு விதங்களில் கொலை மிரட்டல் வருவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பத்திரிகை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழகம் முழுக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்த விவகாரத்தில் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, சடகோப ராமானுஜ ஜீயர் ஆண்டாள் கோயிலில் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொண்டார். ஆனால் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும், “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும். ஆனால் செய்ய மாட்டோம். இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும், இனி அமைதியாக போகமாட்டோம்” என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சடகோப ராமானுஜ ஜீயருக்கு பல்வேறு விதங்களில் கொலை மிரட்டல் வருவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சரவணகார்த்திகேயன் என்பவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூரில்  உள்ள அவரது மடத்திற்கு கடிதம் மூலமும், அலைபேசி மூலமும் கொலை மிரட்டல் கடிதம் வருகிறது. இவ்விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com