தாய், மகன், மகள் மூவரும் தூக்கிட்டு தற்கொலை: பல கோணங்களில் போலீசார் விசாரணை

தாய், மகன், மகள் மூவரும் தூக்கிட்டு தற்கொலை: பல கோணங்களில் போலீசார் விசாரணை
தாய், மகன், மகள் மூவரும் தூக்கிட்டு தற்கொலை: பல கோணங்களில் போலீசார் விசாரணை

நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியில் தாய், மகள் மற்றம் மகன் ஆகிய 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள கரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். காய்கறி வியாபாரம் செய்து வரும் இவருக்கு முருகேஸ்வரி (33) என்ற மனைவியும், சந்தோஷ் (15) என்ற மகனும், சௌந்தர்யா (13) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை சந்திரபோஸ் வழக்கம் போல வியாபாரத்திற்கு சென்றுவிட்ட நிலையில், இவரது மனைவி, மகன், மகள் ஆகிய மூவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் நிலக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தை ஆய்வு செய்த நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்னை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com