டிக்கெட்டா... குழந்தைகளா... மூதாட்டியிடம் குழந்தைகளை விட்டுவிட்டு டிக்கெட் வாங்க நின்ற தாய்..!

ஐபிஎல் டிக்கெட் வாங்குவதற்காக வரிசையில் நிற்க தனது இரண்டு குழந்தைகளை விட்டுச் சென்ற தாய்.. காவல்துறையினர் உதவியுடன் குழந்தை மீண்டும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது
ஐபிஎல் டிக்கெட்
ஐபிஎல் டிக்கெட்கோப்பு புகைப்படம்

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி மே 14-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதற்காக இரவு 10 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் நிற்க தொடங்கினர்.

சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்

இந்நிலையில் ஐபிஎல் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க இரண்டு குழந்தைகளுடன் வந்த பெண்மணி, ஒரு மூதாட்டியிடம் குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார். ஒன்றரை மணி நேரம் ஆகியும் குழந்தைகளை பெற தாய் வராததால் அந்த மூதாட்டி காவல்துறையின் உதவியை அணுகினார். காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் குழந்தைகளின் தாயை அழைத்தனர். அப்போது குழந்தையின் பாட்டி என கூறி ஒருவர் வந்ததால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. விசாரணைக்கு பின்னர் குழந்தைகளை அவர்களது பாட்டியிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அந்தக் குடும்பத்தை எச்சரித்து அனுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com