சென்னை மெரினா கடற்கரையில் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு, தாயும் அதே கத்தியில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பவித்ரா என்பவர் தனது 6 வயது மகளையும், 3 வயது ஆண் குழந்தையும் அழைத்துக் கொண்டு மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். இரவு 7 மணியளவில் திடீரென தனது குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நிகழ்விடத்தில் இருந்த மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
மூவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது பெண் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பவித்ரா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், 3 வயது ஆண் குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை முயற்சி அரங்கேறியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.