“மூன்றாவதும் பெண்குழந்தை; மாமியாரின் தூண்டுதலால் குழந்தையை கொலை செய்தேன்” - தாய் அதிர்ச்சி

“மூன்றாவதும் பெண்குழந்தை; மாமியாரின் தூண்டுதலால் குழந்தையை கொலை செய்தேன்” - தாய் அதிர்ச்சி
“மூன்றாவதும் பெண்குழந்தை; மாமியாரின் தூண்டுதலால் குழந்தையை கொலை செய்தேன்” - தாய் அதிர்ச்சி

ஆண்டிப்பட்டியில் 3-ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து குழந்தையை கொலை செய்த தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக உசிலம்பட்டியில் பெண் சிசு கொலை அரங்கேறிய நிலையில் தற்போது ஆண்டிப்பட்டியில் பெண் சிசு கொலை நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராம ஊராட்சியை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சுரேஷ், கவிதா தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து கடந்த மார்ச் 2-ஆம் தேதி குழந்தை திடீரென வயிற்று வலியால் இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிட்டு வீட்டின் அருகே குழந்தையை புதைத்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து சமூக குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சமூக குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெற்ற தாயே குழந்தையை எருக்கம்பால் ஊற்றி கொலை செய்தது தெரியவந்துள்ளது. பெண் சிசுக்கொலை தொடர்பாக தாய் கவிதா மற்றும் குழந்தையின் பாட்டி செல்லம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாமியாரின் தூண்டுதலால் குழந்தையை கொலை செய்தேன் என தாய் கவிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com