இரக்கமில்லாமல் தகாத உறவிற்காக குழந்தையை கொன்ற தாய் கைது !

இரக்கமில்லாமல் தகாத உறவிற்காக குழந்தையை கொன்ற தாய் கைது !
இரக்கமில்லாமல் தகாத உறவிற்காக குழந்தையை கொன்ற தாய் கைது !

வாணியம்பாடி அருகே பெற்ற தாயே ஆண் நண்பருடன் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் கர்நாடக மாநிலம் பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சசிகுமார் பெங்களூருவில் கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு மொத்தமாக 3 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நளினி தனது ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது முரளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால், வாணியம்பாடி அருகே தனியாக வீடு எடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

(முரளி)

இதனிடையே தனது ஒன்றரை வயது மகளுக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார் நளினி. ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அத்துடன் உடலில் காயங்கள் இருப்பதால் குழந்தையை உடல்கூறு பரிசோதனை செய்த பின்புதான் கொடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதேமசயம் நளினியின் தந்தையும் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து நளினி, முரளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால்  குழந்தையை ஜல்லி கரண்டி மற்றும் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். தற்போது இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com