சொத்து தகராறு: மாமியாரை கடத்திய மருமகள்!

சொத்து தகராறு: மாமியாரை கடத்திய மருமகள்!

சொத்து தகராறு: மாமியாரை கடத்திய மருமகள்!
Published on

சென்னை அயனாவரத்தில் சொத்து தகராறு காரணமாக மாமியாரை கடத்திய மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் பத்மினி. இவருக்கும் இவரது மருமகள் மேனகாவிற்கும் சில நாட்களாகச் சொத்து தொடர்பான பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி பத்மினியை காணவில்லை என அவரது உறவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது. இதில், மேனகா, தனது மாமியாரை கடத்தி உறவினர் வீட்டில் வைத்து சித்திரவதை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, பத்மினியை மீட்ட காவல்துறையினர், மேனகாவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com