மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த கார்... மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம்!

மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த கார்... மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம்!
மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த கார்... மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சோகம்!

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் அதிவேகமாக மோதியதில் மகன் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொப்பம்பட்டி ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - விஜயா தம்பதியினர். இவர்களது மகன் ரவிக்குமார் (28) நாமகிரிப்பேட்டை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மகன் ரவிக்குமார் தனது தாய் விஜயாவுடன் இருசக்கர வாகனத்தில் ஆண்டலூர்கேட் பகுதியில் இருந்து, சொந்த ஊரான தொப்பப்பட்டி ஜேடர்பாளையத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் (65) என்பவர் சொகுசு காரில் நாமக்கலை நோக்கி அதிவேகமாக சென்றதாகத் தெரிகிறது.

இதனால் நாமக்கல் சாலை மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ரவிக்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தாய் - மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். வேகமாக தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். எனினும், சம்பவ இடத்திலேயே மகன் ரவிக்குமார் கண் முன்னே தாய் விஜயா உயிரிழந்தார். பின்னர் ரவிக்குமாரை மீட்டு முதல் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

தாய் விஜயாவின் உடல் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக காரை இயக்கிய நபரால், மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com