மகன் இறந்த துக்கம்... தாய்- தந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை..!

மகன் இறந்த துக்கம்... தாய்- தந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை..!

மகன் இறந்த துக்கம்... தாய்- தந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை..!
Published on

கரூரில் மகன் இறந்த துக்கத்தில் கணவன் மனைவி இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே உள்ல சணப்பிரட்டி எழில் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவர் கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் பாலச்சந்தர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அன்றிலிருந்தே கணவன்-மனைவி இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை இருவரும் கரூர் திண்டுக்கல் இடையிலான ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com