பெண்ணின் படம் மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிப்பு: பணம் கேட்டு மிரட்டிய மாணவர் கைது

பெண்ணின் படம் மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிப்பு: பணம் கேட்டு மிரட்டிய மாணவர் கைது
பெண்ணின் படம் மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரிப்பு: பணம் கேட்டு மிரட்டிய மாணவர் கைது

பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த நபரொருவர் ராமநாதபுரம் எஸ்பி வருண் குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரின் அழைப்பை ஏற்று பேசிய வருண் குமாரிடம் அந்த நபர் தனது மனைவியின் புகைப்படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து, அந்தப் புகைப்படத்தை பிற பெண்களின் ஆபாசப் படங்களோடு இணைத்து, முக நூலில் ஒருவர் பதிவிட்டுள்ளதாகவும், இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடாமால் இருக்க ரூ 20,000 பணம் தர வேண்டும் என மிரட்டியதாக புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்பி வருண்குமார் தனிப்படை ஒன்றை அமைத்து இணையவழி குற்றத்தடுப்பு போலீசார் உதவியோடு விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பணம் கேட்டு மிரட்டியது பரமக்குடியை அடுத்த உலக நாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரோஹித் என்ற 19 வயது இளைஞர் என்பதும் கோவை தனியார் கல்லூரியில் பயின்று வரும் இவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சம்பந்தப்பட்ட பெண்களின் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் கேட்டு மிரட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அவர் ஏராளாமான ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரோஹித்தை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று ஏதாவது பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலோ, சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்கள் அவதூறாக குறுஞ்செய்தி அனுப்பிய தொந்தரவு செய்தாலோ எந்தவித தயக்கமும் அச்சமும் இன்றி காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக தொலைபேசி எண்ணான 9489919722 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் இதுபோல புகார் அளிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் ராமநாதபுரம் எஸ்பி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com